Vol. 10 No. 39 (2024): மலர் : 10, இதழ் : 39 ஆகஸ்ட் (August) 2024

					View Vol. 10 No. 39 (2024): மலர் : 10, இதழ் : 39 ஆகஸ்ட் (August) 2024
தமிழ் ஆய்வாளர்கள் பன்னாட்டுத் தரநிலையில் ஆய்வுக்கட்டுரைகள் எழுதுவதில் தயக்கம் ஏன்?

இனம் பல்துறைப் பன்னாட்டு ஆய்விதழ், பல்வேறு முயற்சிகளைக் கடந்த காலங்களில் செயல்வடிவங்களுக்குக் கொண்டுவந்தது; இப்பொழுது கொண்டு வருவதிலும் முனைப்புக்காட்டி வருகின்றது என்பதைத் தொடர்ந்து இனத்துடன் பயணிப்பவர்கள் அறிவர். தமிழ் ஆய்வுகள் பன்னாட்டுத் தரத்திலான ஆய்வுமுறைகளைக் கடைப்பிடித்து எழுதுவதில் பின்தங்கியே உள்ளன. அதனால் என்னவோ புதிய ஆய்வுச் சிந்தனைகளைக் காண்பது அரிதாகவே உள்ளது. ஆய்வேடுகள் எழுதுவதுபோன்றே ஆய்வுக்கட்டுரைகள் எழுதுவது என்ற எண்ணம் இன்று அருகியே உள்ளது. ஒரு தலைப்பினை எடுத்துக்கொண்டு அதற்கு முன்பு அந்தத் தலைப்பில் ஆய்வுகள் நிகழ்ந்துள்ளனவா என்ற புரிதல் இல்லாமல் அத்தலைப்பிற்குரிய விளக்கவுரையாகப் பெரும்பான்மையான ஆய்வுகள் குவிந்துள்ளன என்றால் மிகையில்லை. அவற்றை ஆய்வுகள் என்பதா அல்லது பொதுக்கட்டுரை என்பதா? 

ஆகையால், இனம் இதழானது கடந்த பத்தாண்டுகள் கண்ட படிப்பினைகளுள் அதுவும் ஒன்று. எனவே, இனம் பதினோராம் ஆண்டில் தடம் பதிக்கும்பொழுது பன்னாட்டுத்தர நிலையில் அறிவியல்சார் ஆய்வுகள் பின்பற்றிவரும் அமைப்புமுறையைத் தமிழ் ஆய்வாளர்தம் சிந்தையிலும் கொண்டு வந்து, புதுப்பொலிவுடன் இன்னும் சில அளவுகோல்களை வரையறுத்து ஆய்வுக்கட்டுரைகள் வெளியிட முனைகின்றது. அதன் முதற்கட்ட முயற்சியாக, அந்த ஆய்வுக்கட்டமைப்பின் அடிப்படையிலான ஆய்வுக்கட்டுரை எழுதுவதற்குரிய வழிகாட்டல் குறிப்புகளை இதன்வழி வழங்குகின்றது; பின்பு அதுகுறித்த பயிற்சிகளையும் வழங்குவது எனத் திட்டமிட்டு வருகின்றது. அதனடிப்படையில் உருவானதே இந்த எழுத்தாக்கமாகும். அதாவது அறிவியல்முறையைப் பின்பற்றும் (முதலிரு) முன்னணி ஆய்விதழ்களின் அமைப்புமுறையை இதன்மூலம் இங்குக் கவனப்பபடுத்த முனைகின்றது இனம். இதில் ஆய்வுச்சுருக்கம், திறவுச்சொற்கள், அறிமுகம், ஆய்வுமுறைகள், முடிவுகள், கலந்துரையாடல், முடிவுரை, மேற்கோள், துணைநூற்பட்டியல், கட்டுரைத் தகுதி ஆகியன அமைய வேண்டிய வழிமுறைகள் குறித்தும் தலையங்கமாக இந்தப் பதிப்பில் இடம்பெறுகின்றது.

தமிழ் ஆராய்ச்சியாளர்கள் எதிர்வரும் பதிப்புகளில் இனம் பதிப்பு நெறிமுறையைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை எழுதி ஒப்படைப்புச் செய்யுங்கள்.

மாதிரிக்குப் பின்வரும் கட்டுரையின் அடிப்படை அமைப்பினைப் பாருங்கள்...

அறிவுசார் சொத்துக்களின் பதிப்புரிமையைப் பெறுவதற்கான தேவையும் வழிமுறையும் Requirement and Method of Obtaining Copyright of Intellectual Property 

(தலைப்பின் எழுத்துரு அளவு 14 இருத்தல் வேண்டும்)

ந.இராஜேந்திரன் | N.Rajendran2ORCID , பா.கவிதா | P.Kavitha2ORCID

(ஆசிரியர் பெயரின் எழுத்துரு அளவு 12 இருத்தல் வேண்டும்)

1 Assistant Professor, Department of Tamil, PSG College of Arts and Science, Coimbatore – 641 014. n[email protected]  Ph.No - 9597536324. 

2 Assitant Professor Of Tamil, PSGR Krishnammal College for Women, Coimbatore. [email protected].

DOI: 10.5281/zenodo.13294453 

(ஆசிரியரின் குறிப்புகள் எழுத்துரு அளவு 11 இருத்தல் வேண்டும்)

ஆய்வுச்சுருக்கம் (Abstract)

அறிவுசார் சொத்துக்களைப் பயன்படுத்த அப்படைப்பாளரின் அனுமதியைப் பெறுவது அவசியமாகும். அப்படைப்பாளரின் அனுமதியைப் பெறாமல் கருத்தையோ, ஆய்வையோ அல்லது எழுத்தையோ நகலெடுத்துத் தன்னுடைய சொந்த முயற்சியில் உருவானதுபோல் திருட்டுத்தனமாகப் பயன்படுத்தினால் அது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும். பணம், பொன், பொருள்களைத் திருடுவது மட்டும்தான் திருட்டு என்பது அல்ல. பிறருடைய கருத்துக்களைத் திருடுவதும் திருட்டுதான். அவ்வகையில் தற்காலத்தில் கல்வி சார்ந்த எழுத்துத் துறைகளில் கருத்துத்திருட்டு பரவலாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இத்திருட்டைத் தவிர்ப்பதற்குப் படைப்பாளர்கள் தமது படைப்புகளைப் பதிப்புரிமை (Copyright) செய்து கொள்ள வேண்டும். ஒருவரது எண்ணத்தில் உருவாகும் அறிவுசார் சொத்துக்களைப் பிறர் எளிமையாகத் திருடி அவருடைய கருத்தைப் போல் பதிவுசெய்துவிடுகிறார்கள் என்பதை அறிந்துகொண்ட இந்திய அரசு இக்குற்றத்தைக் களைவதற்காகவே தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையை (Copyright Division, Department For Promotion of Industry and Internal Trade) உருவாக்கியுள்ளது. இத்துறை 19 வகையான பிரிவுகளைக் கொண்டுள்ளது. 

It is necessary to obtain the permission of the Creator to use the intellectual property. It is a punishable offense to copy an opinion, study, or writing without obtaining the author's permission and using it as if it were one's initiative. Theft is not only about stealing money, gold, and things. Stealing other people's ideas is also plagiarism. In this way, there is widespread disinformation in the field of academic, writing these days. To avoid this mistake, creators should copyright their works. The Government of India has created the Department for Promotion of Industry and Internal Trade (Copyright Division, Department for Promotion of Industry and Internal Trade) to eliminate this crime after knowing that others simply steal the intellectual property created in one's mind and register it as his idea. The department consists of 19 different divisions.

திறவுச்சொற்கள் (Keywords): ந.இராஜேந்திரன், பா.கவிதா, அறிவுசார் சொத்து, பதிப்புரிமை, அறிவுத் திருட்டு, ஒழுக்க மீறல்.

(ஆய்வுச்சுருக்கத்தின் எழுத்துரு அளவு 9 இருத்தல் வேண்டும்)

முன்னுரை 

பதிப்புரிமை (Copyright) என்பது ஒரு தனிநபரின் இலக்கியம், கலை, இசை, நாடகம், கணினி மென்பொருள், வடிவமைப்புகள், வர்த்தகத்தில் பயன்படுத்தப்படும் சின்னங்கள், பெயர்கள், படங்கள் ஒலிப்பதிவு மற்றும் திரைப்படம் உள்ளிட்ட படைப்புகளின் எழுத்தாளருக்கோ, கலைஞருக்கோ மற்றும் உரிமையாளருக்கோ அவர்களது தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாக்கும் அங்கீகரிக்கப்பட்ட சட்டமாகும். பதிப்புரிமையில் மேற்குறிப்பிட்ட பல பிரிவுகள் இருப்பினும், எழுத்துத்துறையில் அறிவுசார் சொத்துக்களை ஏன் பதிப்புரிமை செய்ய வேண்டும்? செய்வதற்கான தேவை என்ன? பதிப்புரிமை செய்வதற்கான வழிமுறை என்ன? என்பது பற்றி ஆராய்ந்து விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

(கட்டுரைப் பகுதியின் எழுத்துரு அளவு 10 இருத்தல் வேண்டும்)

துணைநூற்பட்டியல்

(துணைநூற்பட்டியலின்  எழுத்துரு அளவு 9 இருத்தல் வேண்டும்)

தமிழ் ஆய்வுகளை உலகத்தரத்திற்கு எடுத்துச்செல்ல முன்வருவீர்களாக....

Published: 19.08.2024