@article{வெள்ளைவாரணனார்_2016, place={India}, title={தொல்காப்பியனார் காலம்: Tholkappiyar period}, volume={2}, url={https://inamtamil.com/journal/article/view/150}, abstractNote={<p><strong>இதழ் 5இன் </strong><strong>தொடர்ச்சி...</strong></p> <p><strong>தொல்காப்பியமும் சங்க இலக்கியமும்</strong></p> <p>            தொல்காப்பிய விதிக்கு மாறான சொல்வழக்குகள் சில திருக்குறளிலும் சங்கத் தொகை நுல்களிலும் காணப்படுகின்றன. தொல்காப்பியனார் காலத்தில் <strong>கள்</strong> என்னும் பன்மை விகுதி அஃறிணையில் மட்டுமே வழங்கியது. <strong>கள்ளொடு சிவணு மவ்வியற் பெயரே, கொள்வழி  யுடைய பலவறி சொற்கே</strong>, என வரும் சூத்திரத்தால் இவ்வுண்மை புலனாம். <strong>பூரியர்கள்</strong> (919), <strong>மற்றையவர்கள்</strong> (263) எனத் திருக்குறளிலும், <strong>தீதுதீர் சிறப்பின் ஐவர்கள் நிலைபோல</strong> (கலி-26) எனக் கலித்தொகையிலும் உயர்திணைப் பெயரையடுத்துக் கள் விகுதி பயின்று வழங்குவதற்குத் தொல்காப்பியத்தில் விதி கூறப்படவில்லை. அன் விகுதி ஆண்பாற் படர்க்கைக்கே யுரியதெனத் தொல்காப்பியர் வரையறுத்துள்ளார். இவ்விதிக்கு மாறாக <strong>இரப்பன் இரப்பாரை யெல்லாம்</strong> என வருந் திருக்குறளில் அன் விகுதி தன்மை யொருமையில் வழங்குகின்றது. இவ்வாறே <strong>கைவிடுக லேனே</strong> (அகம்-193), <strong>உதவியோ வுடையன்</strong> (அகம்-186), <strong>நினைக்கியான் கிளைஞ  னல்லனே </strong>(அகம்-343), <strong>யான் வாழலனே</strong> (அகம்-362), <strong>உள்ளா ராயினு முளனே</strong> (அகம்-378), <strong>மிகுதிகண் டன்றோ விலனே</strong> (அகம்-379), <strong>ந</strong><strong>னி</strong><strong>யறிந்தன்றோ விலனே</strong> (அகம்-384), <strong>அமளி தைவந் தனனே, அளியன் யானே</strong> (குறுந்-30), <strong>நீயலன் யானென</strong> (குறுந்-36), <strong>யான்</strong> <strong>இழந் தனனே</strong> (குறுந்-43), <strong>விடல்சூ ழிலன்யான்</strong> (குறுந்-300),<strong> யான்கண் டனனோ விலனே</strong>  (குறுந்-311), <strong>உளனே</strong>  (குறுந்-316),<strong> உரைத்தனன் யானாக</strong> (புறம்-136),<strong> அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே</strong> (புறம்-201), <strong>கூறுவன் வாழி தோழி</strong> (நற்-233), <strong>உள்ளின னல்லனோ யானே</strong> (நற்-326), <strong>யான்தொடங் கினனாற் புரந்தரவே</strong> (ஐங்-428) என இவ்வாறு எட்டுத்தொகை நூல்களிலும் அன் விகுதி தன்மை யொருமையில் வழங்கப் பெற்றுளது.<a href="#_ftn1" name="_ftnref1">[1]</a></p> <p><a href="#_ftnref1" name="_ftn1">[1]</a> எதிர்காலம் பற்றி வரும் அல் விகுதியினையே பிற்காலத்தார் அன் ஈறாக வழங்குவர் என நச்சினார்க்கினியர் கூறியுள்ளார்<strong><em>. </em></strong>எனவே தொல்காப்பியனார் காலத்தில் அன் விகுதி தன்மைக்கண் வழங்கப்பெறவில்லை யென்பதும் மிகவும் பிற்பட்ட காலத்திலேயே அன்னீறு தன்மையொருமையில் வழங்கப்பெற்றிருத்தல் வேண்டுமென்பதும் தெளிவாதல் காண்க<strong><em>.</em></strong></p>}, number={6}, journal={இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies)}, author={வெள்ளைவாரணனார் க.வெள்ளைவாரணனார்}, year={2016}, month={Aug.}, pages={14–18} }