உளவியல் என்பது உள்ளத்தைப் பற்றி விஞ்ஞான ரீதியான அறிதலாகும். உளவியல் பற்றிய சிந்தனைகள், கோட்பாடுகள் காலத்திற்குக் காலம் தோற்றம் பெற்று வளர்ச்சியடைந்து வந்துள்ளன. அவற்றினை வளர்த்தெடுப்பதில் உளவியல் அறிஞர்களுக்கு முக்கிய பங்குண்டு. அவ்வறிஞர்கள் காலத்தின் போக்கைப் பிரதிபலிப்பதுடன் காலத்தினை உருவாக்குகின்ற பணியையும் மேற்கொண்டுள்ளனர். இத்தகைய சிந்தனையாளர்கள் வரிசையில் ரசிய நாட்டு உயிரியல் விஞ்ஞானி ஐ.பி.பவ்லோவ் அவர்களுக்குத் தனியிடம் உண்டு.