இருபதாம் நூற்றாண்டின் இலக்கிய வரலாற்றில் பாவேந்தர் பாரதிதாசனுக்குத் தனியிடம் உண்டு. பாரதிக்குத் தாசன் ஒருவன் தான். ஆனால், பாரதிதாசனாரைப் பின்பற்றிப் பாடும் பாவலரோ பலநூறு பேர். தன் படைப்புகளில் பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்த புலவர் இவர். திராவிட இயக்கம் மூலம், பகுத்தறிவு தமிழன் பிறக்க, பெண்ணிடம் தமிழ்க் குடும்பங்கள் அடைக்கலம் புகவேண்டும் என்றார் பாவேந்தர் பாரதிதாசன்.1
அவ்வகையில், பாரத்திதாசனின் படைப்புகளில் இடம்பெறும் பெண் கதாபாத்திரங்களின் செயல்திறனை மதிப்பிடுகின்றது இக்கட்டுரை.