நொய்யல் ஆற்றின் வளம் கொழிக்க வேளாண் செழித்த ஊராக விளங்கிய கோயம்புத்தூர் இன்று தமிழகத்தின் முதன்மையான தொழில் நகரமாக (சென்னைக்கு அடுத்த இரண்டாவது பெரிய நகரம்) விளங்கி வருகின்றது. கல்வி நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் நிறைந்து பெருகி வரும் இவ்வூரில் பழுமரம் நாடும் பறவைகள் போல மக்கள் வந்து குடியேறுகின்றனர். இத்தகு சிறப்புமிக்க கோயம்புத்தூரில் நோக்கத்தாலும், தோற்றக் காரணத்தாலும் ஒவ்வொருவரையும் திரும்பிப் பார்க்கச் செய்யும் சிறப்புடன் விளங்குகிறது வாரியார் நூல் நிலையம்.